மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் ஆறு – பேதுருவுக்கும்

மத். 28:7—சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.

மாற்கு 16:7—நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார். அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.

விழுந்துபோன பேதுரு

நான்கு சுவிசேஷங்களும் கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் கதையைப் பதிவுசெய்கின்றன. ஆனால் மாற்குவின் சுவிசேஷத்தில் மட்டுமே பேதுருவுக்கும் என்ற வார்த்தை உள்ளது. யோவானே கர்த்தர் நேசித்த ஒருவனாக இருந்ததால், ஏன் வேதாகமம் “யோவானுக்கும்” என்று கூறவில்லை? தோமா கர்த்தரின் உயிர்த்தெழுதலைக் குறித்து சந்தேகமுள்ளவனாக இருந்ததால், ஏன் அது “தோமாவுக்கும்” என்று கூறவில்லை? அந்தத் தூதன் அதிசிறந்த சீஷர்களையோ அதிக தேவையிலிருந்த சீஷர்களையோ குறிப்பிடவில்லை. அவன் குறிப்பாக பேதுருவைக் குறிப்பிட்டான். ஏன்? எது பேதுருவை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தியது?
பேதுரு எவ்வித நபராக இருந்தான்? உயிர்த்தெழுதலுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு, ஒரு பெரிய பாவத்தை, பிதாவின் தூதர்களுக்கு முன் கர்த்தர் பேதுருவை அறிக்கையிட மறுப்பதற்கு ஏதுவான ஒரு பாவத்தை, அவன் செய்தான். பேதுரு கர்த்தரை மனுஷருக்கு முன் மறுதலித்தது மட்டுமல்லாமல், அந்தக் காலத்தில் மற்றவர்களால் இழிவாகக் கருதப்பட்ட ஒரு வேலைக்காரிக்கு முன்பாகக் கூட அவன் கர்த்தரை மறுதலித்தான். ஆனால் தம் உயிர்த்தெழுதலைப் பற்றி சீஷர்களுக்கும் பேதுருவுக்கும் பெண்கள் சொல்லும்படியே கர்த்தர் விரும்பினார். பேதுருவுக்கும் என்ற வார்த்தைக்கு மிக ஆழமான அர்த்தம் உள்ளது! பேதுருவின் அனுபவம் எந்தச் சகோதரனுக்கோ சகோதரிக்கோ இருந்திருந்தால், அவர்கள் இவ்வாறு நினைக்கக்கூடும்:

“ஆ! நான் விழுந்துவிட்டேன். நான் செய்திருக்கிற பாவம் ஒரு சாதாரண பாவம் அல்ல. நான் இனிமேல் கர்த்தரிடம் நெருங்கி கிட்டிசேர முடியாது என்று அஞ்சுகிறேன். கர்த்தர் ஏற்கெனவே என்னைக் கைவிட்டிருப்பார்…ஒருமுறை, அவர் ஜீவிக்கும் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நான் அறிக்கையிட்டேன். இன்னொரு முறை, நான் அவரிடம், ‘கர்த்தாவே, யாரிடம் நாங்கள் போவோம்? உம்மிடம் நித்திய ஜீவ வார்த்தைகள் உண்டே’ என்று கூறினேன். ஆனால் இறுதியில், கர்த்தர் சிலுவையில் அறையப்படவிருந்தபோதோ, நான் விழுந்துபோனேன். அவரை மறுதலித்தல் என்ற மாபெரும் பாவத்தைச் செய்துவிட்டேன்.”

கர்த்தர் குறிப்பாக பேதுருவைக் குறிப்பிடுதல்— இதுவே சுவிசேஷமாக இருத்தல்

இங்கு ஒரு வீழ்ச்சியடைந்த, பாவகரமான பேதுரு, கர்த்தரை மறுதலித்த ஒரு பேதுரு இருந்தான். ஆயினும் கர்த்தர் குறிப்பாக அவனைக் குறிப்பிட்டார். இதுவே சுவிசேஷம்! சகோதர, சகோதரிகளே, கர்த்தர் உங்களை இரட்சித்துவிட்டால், அவர் உங்களை நித்தியமாக இரட்சிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் நம்பிக்கையிழந்தாலும், கர்த்தர் ஒருபோதும் நம்பிக்கையிழக்க மாட்டார். உங்களைப் போன்ற ஒரு பாவகரமான நபர் அவரிடம் திரும்புவதற்கு வெட்கப்படக் கூடும், ஆனால் நீங்கள் யாருக்கு விரோதமாய் பாவஞ்செய்தீர்களோ அவர் நீங்கள் அவரிடம் திரும்பிவருவதில் தவறேதுமில்லை என்று கருதுகிறார்…[பேதுருவின்] நிலைமை கர்த்தரின் கோரிக்கைகளைவிட மிகத் தாழ்வாக இருந்தது. அவன் அவரைப் பார்க்க எவ்வாறு துணிய முடியும்? ஆனால் எப்படியோ அவன் கர்த்தரைச் சந்திக்கச் சென்றான். பேதுருவுக்கும் என்ற வார்த்தையின் காரணமாக அவன் போகத் துணிந்தான். சகோதர சகோதரிகளே, பேதுருவுக்கும் என்ற வார்த்தைக்குப் பின்னுள்ள கர்த்தரின் நோக்கத்தை நீங்கள் அறிந்தால் நீங்கள் அவரிடம் திரும்புவதற்குப் பதிலாக இன்னும் அவரைவிட்டுத் திரும்புவீர்களா? பேதுருவுக்கும் என்ற வார்த்தையின் கருத்தாழமிக்க உட்கருத்தை நீங்கள் உணர்ந்தறிந்தால் நீங்கள் கர்த்தரிடம் நெருங்கி வர வேண்டும்.

கர்த்தரிடம் திரும்பும்படி
அவர் நமக்குத் திறனளித்தல்

நீங்கள் அவரை நேசிக்காமலோ, அவரைக் கிட்டிச்சேராமலோ, அவரிடம் திரும்பாமலோ இருப்பது உங்களுக்கு மிக எளிதாக இருக்கக் கூடும்; ஆனால் அவர் உங்களை மறப்பதோ, உங்களைக் கைவிடுவதோ, உங்களை நேசிக்காமல் இருப்பதோ அவருக்கு முடியாத காரியம்…நீங்கள் விழுந்தால், அவர் உங்களை மீண்டும் எழச் செய்ய முடியும். நீங்கள் இனி அவரைக் கிட்டிச்சேர முடியாது என்று தோன்றினாலும், பேதுருவுக்கும் என்ற வார்த்தையை விசுவாசத்தில் நின‍ைவு கூருங்கள், அப்போது உங்களால், அவரைக் கிட்டிச்சேர முடியும். நீங்கள் கர்த்தரிடம் நெருங்கி வர விரும்பியும், நீங்கள் அவரைவிட்டுத் தொலைவில் இருப்பதாகவும், அவருக்கு அருகில் வர உங்களுக்குப் பலமில்லையென்றும் உணரும்போது,பேதுருவுக்கும் என்ற வார்த்தையை நீங்கள் நினைவுகூர வேண்டும்…கர்த்தர் பேதுருவையும் ஒதுக்கிவைக்கவில்லை, அவர் உங்களையும் கைவிடவில்லை. பேதுருவுக்கும் என்றால் “நீங்களும்” என்று பொருள், அதாவது பேதுரு போன்று தோல்வியடைந்திருக்கிற “நீங்கள்.” உங்களுக்கான கர்த்தரின் இருதயத்தை நீங்கள் பார்ப்பீர்களாக. நீங்கள் கர்த்தரின் இருதயத்தைப் பார்த்தால், நீங்கள் அவரை நோக்கி ஓடுவீர்கள். (CWWN, vol. 18, “And Peter,” pp. 251-254)
Reference: CWWN, vol 18, “And Peter”

Assurance and Joy of Salvation— Loved by the Lord – 284

1. Loved with everlasting love,
Led by grace that love to know;
Spirit, breathing from above,
Thou hast taught me it is so.
Oh, this full and perfect peace!
Oh, this transport all divine!
In a love which cannot cease,
I am His, and He is mine.

2. Heaven above is softer blue,
Earth around is sweeter green;
Something lives in every hue
Christless eyes have never seen:
Birds with gladder songs o’erflow,
Flow’rs with deeper beauties shine,
Since I know, as now I know,
I am His, and He is mine.

3. Things that once were wild alarms
Cannot now disturb my rest;
Closed in everlasting arms,
Pillowed on the loving breast.
Oh, to lie forever here,
Doubt and care and self resign,
While He whispers in my ear,
I am His, and He is mine.

4. His forever, only His:
Who the Lord and me shall part?
Ah, with what a rest of bliss
Christ can fill the loving heart.
Heaven and earth may fade and flee,
Firstborn light in gloom decline;
But, while God and I shall be,
I am His, and He is mine.

Jump to section