மேய்த்துப்பேணுதல்

திரட்டு 3

நம்புதலும்
கீழ்ப்படிதலும்

Jump to section

பாடம் பன்னிரெண்டு – விசுவாசமும் கீழ்ப்படிதலும்

ரோ. 6:11-14—அப்படியே நீங்களும், உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 12ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. 13நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இரண்டு கோட்பாடுகள் மட்டுமே உள்ளன: ஒன்று விசுவாசம்; மற்றொன்று கீழ்ப்படிதல் ஆகும். நல்ல கனி அனைத்தும் இந்த இரண்டு கோட்பாடுகளிலிருந்தே வருகின்றன. கர்த்தருடனான நம் ஐக்கியத்தில், ஒவ்வொரு நாளும் நமக்கு விசுவாசமும் கீழ்ப்படிதலும் தேவை.

புறம்சார்ந்த மற்றும் அகம்சார்ந்த சத்தியம்

விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதல் என்றால் என்ன? புறம்சார்ந்த சத்தியங்கள் அனைத்தும் கிறிஸ்துவில் உள்ளன, அவை நிறைவேற்றப்பட்டுள்ளன. அகம்சார்ந்த சத்தியங்கள் அனைத்தும் பரிசுத்த ஆவியில் உள்ளன, அவை அவரால் நிறைவேற்றப்படும்…மீட்பு ஆயிரத்து தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிறைவேற்றப்பட்டது, இப்படியிருக்க இரட்சிப்பு நீங்கள் கர்த்தரில் விசுவாசித்த நாளில் நிறைவேற்றப்பட்டது. ஆகையால், மீட்பு புறம்சார்ந்தது; அது கிறிஸ்துவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இரட்சிப்பு அகம்சார்ந்தது; இது பரிசுத்த ஆவி நம்மில் நிறைவேற்றுவதாகும். இந்த இரண்டு காரியங்களின் வரிசைக்கிரமம் மாற்றப்பட முடியாது.

புறம்சார்ந்த ஒவ்வொன்றும் கடந்த காலத்தில் உள்ளது; அது முற்றும்முடிவானது, முழுமையானது, எதுவும் அதனுடன் சேர்க்கப்பட முடியாது. அகம்சார்ந்த ஒவ்வொன்றும் தற்காலத்திலும், எதிர்காலத்திலும் நிறைவேற்றப்படுகிறது. புறம்சார்ந்த ஒன்றைப் பெறுவதற்கும், அகம்சார்ந்த ஒன்றைப் பெறுவதற்கும் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கோட்பாடுகள் தேவை. புறம்சார்ந்தது நிறைவேற்றப்பட்டிருப்பதால், நாம் விசுவாசிக்க மட்டுமே வேண்டும். அகம்சார்ந்தது இப்போதும் எதிர்காலத்திலும் நிறைவேற்றப்படுவதால், நாம் கீழ்ப்படிய வேண்டும். நாம் ஒரு பக்கத்துக்கு மட்டுமே கவனத்தைச் செலுத்தினால், நாம் தத்துவவாதிகளாகி அல்லது துறவுபூண்டவர்களாகி நாம் வழிதப்பிச் செல்வோம். புறம்சார்ந்த மரணம், உயிர்த்தெழுதல், மற்றும் பரமேறுதலுக்கு நம் விசுவாசித்தல் தேவை. எனினும், விசுவாசிப்பது மட்டுமே போதுமானதல்ல. நாள்தோறும் நாம் கீழ்ப்படியவும் வேண்டும். கிறிஸ்துவுடனான சிலுவைமரணத்திற்கு கீழ்ப்படிதல் தேவை; உயிர்த்தெழுதலின் வல்லமைக்கு கீழ்ப்படிதல் தேவை; பரமேறுதலின் இடத்திற்கும் கீழ்ப்படிதல் தேவை.

இரட்சகரில் விசுவாசித்தலும்,
பரிசுத்த ஆவிக்குக் கீழ்ப்படிதலும்

சகோதர சகோதரிகளே, நமக்கு ஒரு புறம்பான இரட்சகரும், ஓர் உள்ளார்ந்த இரட்சகரும் தேவை. மாம்சத்தில் மனுஉருவெடுத்த வார்த்தையும், பரிசுத்த ஆவியில் வெளியரங்கமாக்கப்படும் வார்த்தையும் நமக்குத் தேவை. நமக்கு கொல்கொதாவின் கிறிஸ்துவும், ஆவியானவரிலுள்ள கிறிஸ்துவும் தேவை. வெளியிலிருக்கும் இரட்சகர் நம் விசுவாசத்தைக் கோருகிறார், இப்படியிருக்க உள்ளிருக்கும் பரிசுத்த ஆவி நம் கீழ்ப்படிதலைக் கோருகிறார். நாம் விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் புரிந்துகொள்வதற்காக, இப்போது நான் சில அனுபவங்களைப் பற்றி பேச விரும்புகிறேன்.

விசுவாசிப்பது என்பது தேவனின் வார்த்தையை நிஜமாக மாற்றுவது அல்ல. அது, தேவனின் வார்த்தை நிஜம் என்று விசுவாசிப்பதாகும்…தேவனின் கிருபை மூன்று காரியங்களை உள்ளடக்கியுள்ளன: வாக்குத்தத்தம், உண்மை, உடன்படிக்கை. வாக்குத்தத்தம் என்பது நிறைவேற்றப்படப்போகும் ஒன்று. உண்மை என்பது நிறைவேற்றப்பட்ட ஒன்று. புறம்சார்ந்த சத்தியங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டன, அவை நிஜமானவை. நாம் தேவனிடம், “உம் வார்த்தை நான் மரித்துவிட்டேன், உயிர்த்தெழுந்து விட்டேன், பரமேறிவிட்டேன் என்று கூறுகிறது. ஆகையால், நான் மரித்துவிட்டேன், உயிர்த்தெழுந்துவிட்டேன், பரமேறிவிட்டேன் என்று நானும் கூறுகிறேன்” என்று மட்டுமே கூற வேண்டும். உண்மையில், இதுவே நாம் உறுதியாக நிற்பதற்கான வழி. தேவன் பேசினார், அது அவ்வாறே நடக்கிறது.
நம் சுற்றுச்சூழல்கள், உணர்வுகள், சோதனைகள், பாவங்கள், இச்சைகள், அசுத்தமான எண்ணங்கள் ஆகியவற்றைவிட தேவனுடைய வார்த்தையை நாம் விசுவாசிக்க வேண்டும். நாம் இதைச் செய்தால், நாம் நிச்சயமாக வித்தியாசமாக இருப்போம். நாம் செவிகொடுப்பது போதாது. நமக்கு விசுவாசம் இருக்க வேண்டும். தேவன் எல்லாவற்றையும் கிறிஸ்துவில் நிறைவேற்றிவிட்டார் என்பதை நாம் பார்ப்போமாக.

எனினும், வெறுமனே இதுபோன்று விசுவாசிப்பது போதாது என்பதை நாம் அறிய வேண்டும். அதைப் பின் தொடர வேண்டிய ஒரு காரியம் கீழ்ப்படிதலாகும். ஒருபுறம், நாம் விசுவாசித்தாக வேண்டும். மறுபுறம், நாம் கீழ்ப்படிந்தாக வேண்டும். நமது சுயசித்தம் கீழ்ப்படுத்தப்பட வேண்டும், நாம் ஒவ்வோர் அவயவத்தையும் தேவனிடம் வழங்க வேண்டும். சகோதர சகோதரிகளே, நாம் ஜீவிக்கும் விசுவாசத்தைப் பெற்ற பிறகு, நாளுக்கு நாள் நாம் தேவனுக்குக் கீழ்ப்படியக் கற்றுக்கொள்ள வேண்டும்.

“இப்போதிலிருந்து, என் நேரம், என் மனம், என் பணம், என் குடும்பம், மற்றும் என் அனைத்தையும் நான் உமக்கு ஏறெடுக்கிறேன்” என்று நாம் தேவனிடம் கூறகிற ஒரு நேரம் இருக்க வேண்டும். தேவன் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தொடுகிறார். சிலரைப் பொருத்த வரை, தேவன் அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடுகிறார்; மற்றவர்களைப் பொறுத்த வரை, தேவன் அவர்களை இன்னொரு குறிப்பிட்ட இடத்தில் தொடுகிறார். பல வேளைகளில் தேவனின் கோரிக்கை கடுமையாகவும், கடினமாகவும் தோன்றுகிறது. ஆனால் தேவன் நம்மிடம் எதைக் கோரினாலும், நாம் கீழ்ப்படிய வேண்டும். நாம் அவருக்குக் கீழ்ப்படிவோம் என்பதை நாம் நிரூபிக்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஈசாக்கை விட அவருக்கு அதிக விலையேறப்பெற்றது ஒன்றுமில்லை. “நான் ஈசாக்கை ஒரு பலியாக ஏறெடுக்கிறேன்” என்று வாய்மொழியாக கூறுவது மட்டும் போதாது. நிஜத்தில், ஈசாக்கை ஒரு பலியாக நாம் வழங்க வேண்டும். நாம் இதைச் செய்தால், தேவன் ஆயத்தப்படுத்தியுள்ள ஆட்டுக்குட்டியை நாம் பார்ப்போம். நாம் முழுமையாகக் கீழ்ப்படியாதவரை தேவன் திருப்தியடைவதில்லை. நாம் கர்த்தருடன் திட்டவட்டமான இடைபடுதல்களை அனுபவமாக்க வேண்டும்.

விசுவாசம் இல்லாத கீழ்ப்படிதல்

வல்லமையற்றதாயிருத்தல், கீழ்ப்படிதல் இல்லாத விசுவாசம் கற்பனைசார்ந்ததாக இருத்தல்
நாம் விசுவாசிக்க வேண்டும், கீழ்ப்படியவும் வேண்டும். நாம் ஒருமுறை கீழ்ப்படிய வேண்டியது மட்டுமல்லாமல், நாம் தொடர்ந்து கீழ்ப்படிந்தாக வேண்டும். இல்லையெனில், நாம் குறைவுள்ளவர்களாகி, சமநிலையற்றவர்களாக இருப்போம். விசுவாசம் இல்லாத கீழ்ப்படிதல் வல்லமையற்றது. கீழ்ப்படிதல் இல்லாத விசுவாசம் கற்பனைசார்ந்தது. விசுவாசமில்லாமல் கீழ்ப்படிந்திருப்பது மிகவும் வேதனையானது. நம் வாழ்க்கைக்கான வேதவாக்கிய கோட்பாடுகளை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்: விசுவாசித்தல் மற்றும் கீழ்ப்படிதல். (CWWN, vol. 10, pp. 605-607, 610, 612-614)

Reference: CWWN, vol. 10, ch. 19

TRUST AND OBEY

Experience of Christ— Obeying Him – 582

1. When we walk with the Lord
In the light of His Word,
What a glory He sheds on our way;
While we do His good will,
He abides with us still,
And with all who will trust and obey.

Trust and obey,
For there’s no other way
To be happy in Jesus,
But to trust and obey.

2. Not a shadow can rise,
Not a cloud in the skies,
But His smile quickly drives it away;
Not a doubt or a fear,
Not a sigh or a tear,
Can abide while we trust and obey.

3. Not a burden we bear,
Not a sorrow we share,
But our toil He doth richly repay;
Not grief or a loss,
Not a frown or a cross,
But is blest if we trust and obey.

4. But we never can prove
The delights of His love,
Until all on the altar we lay;
For the favor He shows,
And the joy He bestows,
Are for them who will trust and obey.

5. Then in fellowship sweet
We will sit at His feet,
Or we’ll walk by His side in the way;
What He says we will do;
Where He sends, we will go,
Never fear, only trust and obey.

 

Jump to section