மேய்த்துப்பேணுதல்

திரட்டு 1

உயர்வான சுவிசேஷம்

பாடம் ஒன்று – மனித வாழ்வின் பரம இரகசியம்

ரோ. 9:23—“தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள் மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தை தெரியப்படுத்த”

ரோ. 10:9—“என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்”

தேவனுடைய திட்டம்

தேவனுக்கு ஒரு திட்டம் உண்டு. இந்தத் திட்டம் முழுவதும் மனிதனோடு தொடர்புடையது (எபே. 1:6). வேதத்தில், இந்தத் திட்டம் தேவனுடைய பொருளாட்சி என்று அழைக்கப்படுகிறது (எபே. 3:9-11).

தேவனுடைய பொருளாட்சி என்பது மனிதனுக்காக தேவனுடைய முழுத் திட்டமே. இது மனிதனின் தொடக்கத்தையும், முடிவையும், மனித வாழ்வின் அர்த்தத்தையும் விவரிக்கிறது.

மனிதன் ஒரு பாத்திரமாக
சிருஷ்டிக்கப்படுதல்

நீங்கள் வெறுமனே உங்கள் வயிற்றில் உணவை உள்ளடக்கிக்கொள்ளவும், உங்கள் மனதில் அறிவை உள்ளடக்கிக்கொள்ளவும் சிருஷ்டிக்கப்படவில்லை, மாறாக உங்கள் ஆவியில் தேவனை உள்ளடக்கிக் கொள்வதற்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள் (ரோ. 9:23-24; எபே. 5:18).

பாவம் மனிதனுக்குள் நுழைதலும்,
அவனை வீழ்ச்சியடையச் செய்தலும்

பாவம் மனிதனின் ஆவியை மரிக்கச் செய்தது… (2:1). பாவம் மனிதனின் மனதைக் கலகம் செய்ய வைத்தது…(கொலோ. 1:21). பாவம் மனிதனின் சரீரத்தைப் பாவம் செய்ய வைத்தது…(ரோ. 6:12)…வரலாறு முழுவதும், மனிதன் பாவத்திலிருந்து தப்பிப்பதற்குச் சாத்தியமான எல்லா வழிகளையும் முயன்றுவிட்டான், [ஆனால், மனிதன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாது].

மீட்பின் வேலையை நிறைவேற்றுவதற்கு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுதல்

தேவ ஆட்டுக்குட்டியாக, அவர் மனிதனின் பாவத்தை எடுத்துப் போடுவதற்காக மரித்தார்…(யோ. 1:29),…வெண்கலச் சர்ப்பமாக,…அவர் பழைய சர்ப்பமாகிய சாத்தானை நசுக்குவதற்காக மரித்தார் (3:14); கோதுமை மணியாக, தெய்வீக ஜீவனை விடுவிக்க அவர் மரித்தார்…(12:24).

மனிதனை மறுபடிஜெநிப்பிப்பதற்காக
தேவனின் பகிர்ந்தளித்தல்

தேவன் மாம்சமானார், இயேசு என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதனாக பிறந்தார்…“அந்த வார்த்தை மாம்சமாகி, நம் மத்தியில் வாசஸ்தலமிட்டார்” (1:14, கிரே.). கர்த்தர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததின் மூலம் ஜீவன்-தரும் ஆவி என்று அழைக்கப்படுகின்ற ஆவியானார்… “கடைசி ஆதாம் ஜீவன்-தரும் ஆவியானார்” (1 கொரி. 15:45). இந்த ஆவியானவர் ஜீவன்தரும் ஆவியாக, இருப்பதால், அவர் தேவனை அவரது ஜீவனோடு அவரது விசுவாசிகளுக்குள் பகிர்ந்தளிக்கிறார்.

நீங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

1.உங்கள் இருதயத்தை தேவனிடம்

திருப்புங்கள்—மனந்திரும்புங்கள்

மனந்திரும்புதல் என்பது மனதில் ஒரு மாற்றத்தை அடைவதாகும்.

“மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” (மத். 4:17).

2.விசுவாசியுங்கள்—பெற்றுக்கொள்ளுங்கள்

விசுவாசிப்பது என்பது பெற்றுக்கொள்வதாகும்.

“அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ள-வர்களாய் அவரைப் பெற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவ-னுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகா-ரங்கொடுத்தார்” (யோ. 1:12, கிரே.).

அறிக்கையிடுங்கள்—கூப்பிடுங்கள்

கிறிஸ்தவனாக இருப்பதென்பது ஒரு வெளிப்படை-யான காரியம். உங்கள் இருதயம் விசுவாசிக்கவும், உங்கள் வாய் அறிக்கைசெய்யவும் தேவன் கோருகிறார்.

“…கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்” (ரோ. 10:9).

ஞானஸ்நானம் பெறுங்கள்—சாட்சியிடுங்கள்

ஞானஸ்நானம் என்பது மனிதர்களுக்கு முன்-பாக ஒரு சாட்சியாகும். தேவனுக்கு முன்பாக மட்டுமல்லாமல், மனிதர்களுக்கு முன்பாகவும் இரட்சிக்கப்படுமாறு எல்லா விசுவாசிகளும் ஞானஸ் நானம் பெற வேண்டும்….ஞானஸ்நானத்தின் மூலம், தேவன் நம்மைச் சாத்தானின் இராஜ்ஜியத்திலிருந்து தேவனுடைய இராஜ்ஜியத்துக்குள் இடமாற்றுகிறார். இந்தக் காரணத்தினால், கர்த்தராகிய இயேசு: “ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்கிறேன்” (யோ. 3:5) என்றார்.

இப்பொழுது தயவுசெய்து ஜெபியுங்கள்:

“கர்த்தராகிய இயேசுவே! நான் ஒரு பாவி. நீர் எனக்குத் தேவை. என் ஆவிக்குள் வாரும். என் பாவத்தை எடுத்துப் போடும். நான் தேவனுடைய ஜீவனைப் பெறும்படி என்னை நிரப்பும். நான் இப்போதே உம்மை என் இரட்சகராகவும், ஜீவனாகவும் பெற்றுக்கொள்கிறேன். நான் என்னை உம்மிடம் தருகிறேன். நான் இதை உமது நாமத்தில் கேட்கிறேன். ஆமென்!”

குறிப்பு புத்தகம்: மனித வாழ்வின் பரம இரகசியம்

GOD MADE MAN A VESSEL

Gospel—The Meaning of Human Life – 1404

  1. God made man a vessel he
    With a spirit, soul, body.
    God to man his content be
    That through man His glory see.
  2. Man does have God’s image true,
    Noble in his status, too.
    But God’s life man also needs
    Divine nature to receive.
  3. 3.Christ in death as God expressed
    Man redeemed, His blood was shedd’st.
    In His resurrection He
    Enters us our life to be.
  4. Man without Christ will perceive
    That all things are vanity.
    Human life is meaningless
    Without hope or purpose.
  5. But when man takes Christ as life,
    He’s in spirit born anew.
    When he daily lives by Christ,
    Vanity is turned to song.